உங்களுக்கு களத்திர ஸ்தானத்தில் செவ்வாய்பகவானுடன் சனிபகவான் இணைந்திருக்கிறார். அவர்கள் இருவரையும் குருபகவான் சிறப்புப் பார்வையாக பார்வை செய்கிறார். மேலும் தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. உங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை சீராகவே அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.