உங்கள் மகனுக்கு கடக லக்னம், கடக ராசி. லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று, உச்சம் பெற்றுள்ள பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். இதனால் குருசந்திர யோகம் மற்றும் பஞ்சமகா புருஷ யோகங்களிலொன்றான ஹம்ச யோகமும் உண்டாகிறது. களத்திர ஸ்தானத்தில் சனிபகவான் ஆட்சி பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகா யோகத்தைப் பெறுகிறார். புத்திர ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். மற்றபடி சர்ப்ப தோஷம் உள்ளது. குருபகவானின் சங்கமம் சர்ப்ப கிரகங்களுக்கு அமைவதால் சர்ப்ப தோஷமும் குறைந்து விடும். தற்சமயம் நடக்கும் கேது மகாதசை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்து விடும். அதற்குபிறகு நடக்கத் தொடங்கும். உச்சம் பெற்ற சுக்கிரபகவானின் தசையில் சுய புக்தியின் முற்பகுதியில் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். களத்திர தோஷம் என்று எதுவும் இல்லை. பெற்றோருக்கு ஆதரவாக இருப்பார். உங்கள் கணவர் செய்து வரும் தொழிலையும் சேர்த்து கவனிப்பார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி திங்கள் கிழமைகளில் பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.