எனக்கு திருமணம் நடந்து 9 ஆண்டுகள் ஆகின்றது. குழந்தை பாக்கியமில்லை. குழந்தை பாக்கியம் எப்போது கிட்டும்? ஏதாவது தோஷம் உள்ளதா? எனது தொழில் எவ்வாறு நடைபெறும்? கடன்கள் அடையுமா? மனைவிக்கு வேலை கிடைக்குமா? - வாசகர், செய்யார்
By DIN | Published On : 26th April 2019 02:36 PM | Last Updated : 26th April 2019 02:36 PM | அ+அ அ- |

உங்களுக்கு மேஷ லக்னம், துலாம் ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் கர்மாதிபதியான சனிபகவானுடன் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி பாக்கியாதிபதியுடனும் ஆட்சி பெற்ற புதபகவானுடனும் தைரிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். புத ஆதித்ய யோகம், சிவராஜ யோகம். குருசந்திர யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் சனிபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. அதனால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். உங்கள் மனைவிக்கும் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். உங்கள் வியாபாரமும் படிப்படியாக உயரத் தொடங்கும். கடன்களும் அடைந்துவிடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.