எனக்கு நல்ல வேலை அமையவில்லை. எப்போது அமையும்? திருமணம் எப்போது கைகூடும்? பெற்றோரை காப்பாற்றுவேனா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகர், தஞ்சாவூர்
By DIN | Published On : 26th April 2019 02:37 PM | Last Updated : 26th April 2019 02:37 PM | அ+அ அ- |

உங்களுக்கு மிதுன லக்னம், மகர ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மிதுன ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய அயன ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் நீச்சம் பெற்று அந்த வீட்டுக்குரிய புதபகவானுடன் பரிவர்த்தனையில் இருப்பதால் நீச்சபங்க ராஜயோகம், பரிவர்த்தனை ராஜ யோகம் பெறுகிறார். அஷ்டம பாக்கியாதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் திக்பலம் பெற்றிருக்கிறார். தற்சமயம் குருபகவானின் தசையில் கேதுபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதிக்கேற்ற நிரந்தர வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். பெற்றோர்களுக்கு இறுதிவரை ஆதரவாக இருப்பீர்கள். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.