எனது மகள் சி.ஏ., படித்துள்ளார். திருமணத்திற்கு வரன் சரியாக அமையவில்லை. எப்போது வரன் கிடைக்கும்? வரன் எவ்வாறு அமையும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், புதுக்கோட்டை
By DIN | Published On : 26th April 2019 02:37 PM | Last Updated : 26th April 2019 02:37 PM | அ+அ அ- |

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் நான்காம் வீட்டில் ஆட்சி உச்சம் மூலதிரிகோணம் பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகத்தைக் கொடுக்கிறார். சூரியபகவானும் இணைந்திருப்பதால் புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது. களத்திர நட்பு ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியால் பார்க்கப்படுகிறார். இதனால் குருபகவானுக்கு கேந்திராதிபத்ய தோஷம் நீங்க விடுகிறது. தற்சமயம் குருபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டே படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.