எனக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள். எனது சகோதரருக்கு தர வேண்டிய பங்கை எப்போது ஆவணப்படுத்தித் தருவேன்? கடன்கள் எப்போது அடையும்? பெற்றோருக்கு வேண்டிய கடமைகளை இறுதிவரை செய்வேனா?  புதிய வீடு கட்டும் பாக்கியமுண்டா? ஓய்வூதியப் பணம் எப்போது கிடைக்கும்? இறுதிகாலம் எப்படி இருக்கும்?- வாசகர், கடலூர்

உங்களுக்கு துலாம் லக்னம், மேஷம் ராசி. லக்னாதிபதியும் கர்மாதிபதியும் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

உங்களுக்கு துலாம் லக்னம், மேஷம் ராசி. லக்னாதிபதியும் கர்மாதிபதியும் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சுக, பூர்வபுண்ணியாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சூரியபகவான் ஆறாம் வீட்டிலும் அந்த வீட்டுக்கதிபதி குருபகவான் உச்சம் பெற்றும் குருபகவானின் பார்வை குடும்பம் , சுகம் மற்றும் ஆறாம் வீடுகளின் மீது படிவதும் சிறப்பாகும். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் புதபகவான் அமர்ந்திருக்கிறார். தன, நட்பு ஸ்தானாதிபதியும் சகோதரகாரகருமான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானத்தில் இருக்கிறார். தற்சமயம் குருபகவானின் பார்வையிலுள்ள சனிபகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டே உங்கள் சகோதருக்குரிய பங்கை ஆவணப்படுத்தி விடுவீர்கள். உங்கள் பெற்றோருக்கு உங்கள் கடமைகளை இறுதிவரை சரியாகச் செய்து முடிப்பீர்கள். ஓய்வூதியப் பலனும் கிடைத்துவிடும். கடன்களை முழுமையாக அடைத்து விடுவீர்கள். குடும்பத்தில் பெரிய தோஷம் என்று எதுவும் இல்லை. குலதெய்வ வழிபாட்டை வருடமொருமுறை தவறாமல் செய்து வரவும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com