நான் நகை கடையை சிறிய முதலீட்டில் 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். தொழிலில் முன்னேற்றம் இருக்குமா? எனக்கு மூன்று மகன்கள். இரண்டாவது மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். மருமகளுக்கு குறை பிரசவமாகி குழந்தை இறந்து பிறந்தது. எங்களிடம் அடிக்கடி சண்டை போட்டு தாய்வீடு சென்று விடுகிறார். இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பார்களா? குழந்தை பாக்கியம் உண்டா? வெளிநாட்டிலேயே வேலை செய்வாரா? சொந்த வீடு கட்டி வருகிறார். அது எப்போது முடிந்து கிரகபிரவேசம் ஆகும்? மூன்றாவது மகனுக்கு எப்போது திருமணமாகும்? 

உங்கள் இரண்டாம் மகனுக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் சனிபுக்தி நடக்கிறது. சனிபகவான் லக்னாதிபதியாக (கும்ப லக்னம்) ஏழாம் வீட்டில் திக்பலம் பெற்று இருக்கிறார்.

உங்கள் இரண்டாம் மகனுக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் சனிபுக்தி நடக்கிறது. சனிபகவான் லக்னாதிபதியாக (கும்ப லக்னம்) ஏழாம் வீட்டில் திக்பலம் பெற்று இருக்கிறார். தனம், குடும்ப ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்று தர்மகர்மாதிபதிகளுடன் (செவ்வாய், சுக்கிர பகவான்கள்) இணைந்து இருக்கிறார். ஆறாமதிபதியான சந்திரபகவான் ஏழாம் வீட்டில் சுக, பாக்கியாதிபதியின் சாரத்தில் அமர்ந்து இருப்பது சிறு குறை. மற்றபடி அவருக்கு மறுபடியும் வெளிநாடு சென்று வசிக்கவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவரை மறுபடியும் வெளிநாட்டிற்கு அனுப்பலாம். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் வீட்டை கட்டி முடித்து விடுவார். இந்த காலகட்டத்திற்குள் மழலை பாக்கியம் உண்டாகி விடும். அவருக்காக பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். உங்கள் மூன்றாம் மகனுக்கு மேஷ லக்னம், மகர ராசி. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். மற்றபடி பெற்றோருக்கு உங்கள் மகன்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்ப எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com