குரு தசை தொடங்கியவுடன் கட்டுமான கம்பெனி தொடங்கினேன். சனி தசை புதன் புக்தி வரை, சிறப்பாகச் சென்றது. பிறகு சரிவு ஏற்பட்டு இன்றுவரை அனைத்து முயற்சிகளும் தோல்வியே. துலா லக்னத்திற்கு சனி தசை யோக தசையாகச் செல்லும் என்றார்கள். யோகத்திற்குப் பதிலாக கஷ்டங்கள் தான் மிஞ்சியது. கம்பெனி பெரிய நிலையிலிருந்து கீழே விழுந்து விட்டது. மறுபடியும் பழைய நிலைக்கு வருமா? என் ஜாதகத்தில் என்ன குறை? பலரும் யோக ஜாதகம் என்றே கூறினார்கள். தற்சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும்? புதன் தசை எ

உங்களுக்கு துலாம் லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதியான சந்திரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்)

உங்களுக்கு துலாம் லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதியான சந்திரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதியானவர் நான்கு கேந்திரங்களில் கடைசி கேந்திரமான மிகவும் வலுவான உச்ச கேந்திரத்திற்கு அதிபதியாவதால் ஒரு மனிதனின் ஜீவனத்திற்கு காரணமாகிறார். பொதுவாக, தொழில் ஸ்தானம் சர ராசியாக இருந்தால் பல நாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் யோகம் வாய்க்கும் என்று கூற வேண்டும். மற்ற கிரகங்களின் வலுகூடினால் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்துக்கொண்டே இருப்பார். இதற்கு மற்ற கேந்திர திரிகோணாதிபதிகளின் உன்னத பலம் அவசியமாகும்.
 உங்களுக்கு கடக ராசி சர ராசி மற்றும் நீர் ராசியாகவும் ஆகிறது. சந்திரபகவான் நீர் கிரகமாகி ஸ்திர ராசியில் உச்சம் பெறுவதால் உங்கள் தொழிலில் வெளிநாடு சம்பந்தம் இறுதிவரை தொடரும் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சந்திரபகவானின் (ரோகிணி நட்சத்திரம்) சாரத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதியும் ஆட்சி பெற்று வர்கோத்தமும் பெற்று உச்சகிரகத்துடன் இணைந்திருப்பது மிகவும் அரிதான அமைப்பாகும். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் லக்னத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார். துலாம் லக்னத்திற்கு சனிபகவான் ஒரு கேந்திர வீட்டிற்கும் ஒரு திரிகோண வீட்டிற்கும் அதிபதியாகிறார். முதல் வீடு கேந்திரமாகவும் அடுத்த வீடு திரிகோண வீடாகவும் ஒரு சுபாவ அசுபக்கிரகத்திற்கு அமைவது துலாம் லக்னத்திற்குத்தான் அமையும் என்பதை பலமுறை எழுதியிருக்கிறோம். ஏனெனில் சுபாவ அசுபக்கிரகங்களுக்கு கேந்திர வீடுகளுக்கு அதிகாரம் ஏற்பட்டால் மிகவும் பலம் வாய்ந்தது என்று கூறவேண்டும்.
 உங்களுக்கு சனிபகவான் நான்காம் வீட்டிற்கு அதிபதியாகி பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகா யோகத்தைக் கொடுக்கிறார். பிறகு, அவர் முதல் திரிகோண வீட்டிற்கும் அதிபதியாவதால் யோககாரகர் என்கிற நிலைமைக்கு உயர்கிறார். மேலும் அவர் ராஜயோக காரகர் என்கிற பெயரையும் பெறுகிறார். பன்னிரண்டு லக்னங்களில் துலா லக்னத்திற்கு சனிபகவான் இத்தகைய சிறப்பான பெயரைப் பெறுகிறார். அதேநேரம் சனிபகவான் ராகுபகவானின் சாரத்தில் இருப்பது சிறிது குறை என்றே பார்க்கவேண்டும். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும்; அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சுக்கிரபகவானின் (பரணி நட்சத்திரம்) சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். லாபாதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் (பரணி நட்சத்திரம்) சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியில் நீச்சமடைகிறார். ராகுபகவான் மூன்றாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். கேதுபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
 உங்களுக்கு ஜாதகம் மிகவும் வலுவாக அமைந்திருக்கிறது. மூன்று கிரகங்கள் உச்சம். லக்னாதிபதி ஆட்சி. குருபகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து லக்னத்தையும்; அங்கு உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவானையும்; தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய், ராகுபகவான்களையும் பார்வை செய்கிறார். சனிபகவானை குருபகவான் பார்த்த ஜாதகங்கள் சோடை போவதில்லை. யோகங்களில் முக்கியமான யோகமாக சுனபா யோகம் கருதப்படுகிறது. இந்த யோகம் முழுமையாக வேலை செய்ய சந்திரபகவான் அதி உன்னதமான பலம் பெற்றிருக்க வேண்டும். சுனபா யோகத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று பிறந்தது முதல் இறுதிவரை சிறப்பாக வாழ்தல். இரண்டாவது வகை வாழ்க்கையில் முற்பகுதியில் மிகவும் கஷ்டப்பட்டாலும் (பிதுர் சொத்துகள் எதுவும் இன்றி, அப்படி இருந்தாலும் அவைகளை அனுபவிக்க முடியாத சூழல்) சுயமாக சம்பாதித்து ஓர் அரசனுக்கும் சமமான அந்தஸ்தைப் பெறுவது. நீங்கள் இரண்டாம் வகையை சேர்ந்தவர் என்று அறிகிறோம்.
 உங்களுக்கு உச்ச சந்திரபகவானுக்கு இரண்டாம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பது சுனபா யோகமாகும். ஒருவருக்குப் பெரிய யோகம் இல்லை என்றாலும் இந்த யோகம் ஜாதகரை மளமளவென்று உயர்த்திவிடும். எக்காலத்திலும் பணம் கையில் புரண்டு கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களை பங்குதாரர்களாக அமைத்துக் கொண்டு கூட்டு வியாபாரம் செய்தால், செய்யும் வியாபாரத்தில் கண்ணியமும் வாடிக்கையாளர்களின் ஆதரவும் கணிசமான லாபமும் கிடைக்கும். நல்ல புத்தியுடன் மற்றவர்களுக்குத் தீர்க்காலோசனைகளையும் வழங்கிவிடுவார்கள். இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு மற்றவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்கள். அதோடு இவர்கள் ஏற்கும் பயணங்களெல்லாம் மகிழ்ச்சிகரமாகவும் புனித யாத்திரையாகவும் அமையும். அயல்நாடுகளுக்கும் சென்று வருவார்கள். இவர்கள் புகழ் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவி நிற்கும். அந்த அளவுக்கு இவர்களுடைய செயல்திறன் சிறப்புடையதாக பரவி நிற்கும்.
 அனைத்து யோகங்களுக்குள்ளும் ஒரு சோகம் / பிழை ஒளிந்திருக்கும். இவர்களுக்கு எதிரிகளும் மறைந்திருப்பார்கள். இதற்கு மூலக்காரணம் துரிதமாகச் சலனம் செய்யக்கூடிய சந்திரபகவானுக்கு எதிரில் அதாவது முன்பாதையில் சந்திரபகவானுக்கு வேண்டப்படாத குரு, சுக்கிர, புத பகவான்கள் இருப்பதால்தான் இவர்களின் முன்னேற்றத்தைக்கண்டு பொறாமைப்படக்கூடிய மறைமுக எதிரிகளும் எப்பொழுதும் இருந்துகொண்டே இருப்பார்கள். சந்திர, சுக்கிரபகவானால் ஏற்படக்கூடிய சுனபா யோகமானது சுக வாழ்க்கையில் நாட்டத்தை ஏற்படுத்தி குறிப்பாக, பெண்களால் விரோதத்தை ஏற்படுத்தும். சந்திரபகவானுக்கு அடுத்து குருபகவான் இருப்பது சகட யோகத்தை உண்டாக்குகிறது. இது எப்படிப்பட்ட செல்வளத்தையும் உடைத்தெறியும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற அமைப்புடையதாகும். எல்லாம் கூடிவரும் நேரத்தில் காரியம் விக்னமாகி கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விடும்.
 மேற்கண்ட வகையில் சுனபா யோகம் பணத்தைக் கொடுத்து மனதிற்குப் போராட்டத்தையும் கொடுத்துவிடும் என்பதையும் சேர்த்துப் பலன் காணவேண்டும். இது பலரின் ஜாதகத்தில் அமைந்து அனுபவத்தில் ஒத்துவருவதைக் காண்கிறோம். அதாவது, எந்த தசையில் யோகபாக்கியங்கள் உண்டானதோ அதற்கடுத்த தசையில் சரிவும் அதற்குப்பிறகு தொடங்கும் தசையில் மறுபடியும் ஏற்றங்களையும் காண்பார்கள். அதோடு சிறிய அளவில் உள்ள பித்ரு தோஷமும் உங்களின் சனி மகா தசையில் வேலை செய்தது என்றும் கூறலாம்.
 உங்களுக்கு சனி மகாதசை அடுத்த ஆண்டு, மே மாதம் முடிவடைகிறது. தற்சமயம் அஷ்டம சனியும் முடிவடைந்து விட்டது. இந்த ஆண்டே இன்னும் சில மாதத்திற்குள் நீங்கள் எதிர்பார்த்த பண வாய்ப்புகள் கிடைக்கும். தொடரும் புதபகவானின் தசை முழுவதும் கோலோச்சும் காலமாகவே அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com