உங்களுக்கு கடக லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். ஆறாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் ஏழு, எட்டாம் வீடுகளுக்கு அதிபதியான சனிபகவான் மீதும், ஏழாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும் ஒன்பதாம் பார்வை பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சுக, லாபாதிபதியான சுக்கிரபகவானின் மீதும் படிகிறது. உங்களுக்கு தற்சமயம் சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது.
அதோடு லக்னாதிபதி, பூர்வபுண்ணியாதிபதிகளின் புக்திகள் தொடர்ந்து நடக்கும். அதனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து உங்கள் இன்னல்கள் துன்பங்கள் நீங்கத் தொடங்கிவிடும். உடல்நலம் மனவளம் இரண்டும் நல்லபடியாக மாறிவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் அனுமனையும் சனிபகவானையும் வழிபட்டு வரவும்.