நான் என் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறேன். எப்பொழுது நான் என் கணவருடன் இணைந்து வாழ்வேன். பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகி, கோயம்புத்தூர்

உங்களுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் உச்சம் பெற்ற சுக்கிரபகவானு


உங்களுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் உச்சம் பெற்ற சுக்கிரபகவானுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சனிபகவானுடன் இணைந்திருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும்; அங்கு அமர்ந்திருக்கும் சூரிய, புத, ராகு பகவான்களின் மீதும்; ஏழாம் பார்வை பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய், சனிபகவான்களின் மீதும்; ஒன்பதாம் பார்வை களத்திர, நட்பு ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. தற்சமயம் குருபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து செவ்வாய்பகவானின் புக்தி நடக்க இருப்பதால் உங்கள் கணவருடன் இணைந்து வாழ வழிபிறக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com