என் கணவர் அசாதாரணமான முறையில் இறந்து மூன்று ஆண்டுகளாகின்றன. என் மகள்களை நல்ல முறையில் படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்ப எனக்கு ஆசை; இது நிறைவேறுமா? எனக்கு கிடைக்க வேண்டிய சொத்துகள் எப்பொழுது கிடைக்கும்? நான் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? என் எதிர்காலம் எவ்வாறு செல்லும்?
-வாசகி, ......
உங்களுக்கு கடக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னாதிபதி, லக்னத்திலேயே ஆட்சி பெற்றமர்ந்து சுக லாபாதிபதியான சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் ருணம், ரோகம், சத்ரு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்ரகும் அதிபதியான ஆட்சி பெற்றுள்ள குரு பகவானுடன் இணைந்திருக்கிறார்.
சிறப்பான தர்ம கர்மாதிபதி யோகம் பாக்கிய ஸ்தானத்தில் ஏற்படுகிறபடியால் வாழ்க்கையில் உயரிய இடத்தை எட்டிப் பிடித்து விடுவீர்கள். அதோடு சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய கருமங்களை ஆற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்பும் நன்மை தரும்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திர பகவானின் மீதும் (குருச் சந்திர யோகம்), சுக்கிர பகவானின் மீதும் படிகிறது. ஏழாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீதும் படிகிறது.
தனம், வாக்கு, குடும்பாதிபதியான சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் புத பகவான் (புத ஆதித்ய யோகம்), கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் அயன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.
புத்திர ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதிகள் வலுத்திருப்பதால் உங்கள் மகள்கள் இருவரும் நன்றாகப் படித்து அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலைக்குச் செல்வார். கணவர் வழி சொத்துகளும் உங்களுக்கு இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கிடைத்துவிடும். தற்சமயம் சந்திர பகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. தொடரும் செவ்வாய் பகவானின் தசை யோக தசையாகச் செல்லும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.