ஜாதகப்படி எனது தொழில் முன்னேற்றம் எப்படி இருக்கும்? வழக்கில் எனக்கு சாதகமான தீர்ப்பு எப்பொழுது கிடைக்கும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

ஜாதகப்படி எனது தொழில் முன்னேற்றம் எப்படி இருக்கும்? வழக்கில் எனக்கு சாதகமான தீர்ப்பு எப்பொழுது கிடைக்கும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

ஜாதகப்படி எனது தொழில் முன்னேற்றம் எப்படி இருக்கும்? வழக்கில் எனக்கு சாதகமான தீர்ப்பு எப்பொழுது கிடைக்கும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

-வாசகர், ஆத்தூர்

உங்ளுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதி சுக்கிர பகவான் லக்னத்தில் ஆட்சி பெற்றமர்ந்து பஞ்ச மஹா புருஷ யோகங்களிலொன்றான மாளவிகா யோகத்தைப் பெறுகிறார். அவருடன் இரண்டு, ஐந்தாம் வீடுகளுக்கு அதிபதியான புத பகவானும் இணைந்திருக்கிறார். 
தர்ம கர்மாதிபதியான சனி பகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டைப் பார்வை செய்கிறார்.அஷ்டம, லாபாதிபதியான குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று, ஐந்தாம் பார்வையாக லக்னத்தையும், அங்கமர்ந்திருக்கும் புத, சுக்கிர பகவான்களையும், ஏழாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். 
சுகாதிபதி சூரிய பகவான் பன்னிரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று, மூலத் திரிகோணம் பெற்று ருசக யோகத்தைக் கொடுக்கும் செவ்வாய் பகவானுடனும், ராகு பகவானுடனும் இணைந்திருக்கிறார். இதனால் ராகு பகவானுக்கு அஷ்ட மஹா நாகயோகம் உண்டாகிறது. 
தற்சமயம், சுக்கிர மஹா தசையில் சனி புக்தி நடப்பதால், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் வழக்கில் வெற்றி கிடைக்கும். செய்தொழிலிலும் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com