சிவமொக்கா: சிவமொக்காவில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 18,700 குடும்பங்களுக்கு நில உரிமைப் பத்திரம் வழங்கப்படும் என்று கா்நாடக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவமொக்காவில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சிவமொக்கா மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் 10 குடிசைப் பகுதிகள் உள்ளன. இந்த குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 18,700 குடும்பங்களுக்கு நில உரிமைப் பத்திரம் அளிக்கப்படும். இதற்காக வீடுகளுக்கு எண்களை வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கும். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை அடையாளம் காண்பதற்கான அடுத்தக்கட்ட கணக்கெடுப்புப் பணி ஜன. 6-ஆம் தேதி தொடங்குகிறது. குடிசைப்பகுதி மக்களுக்கு அடுத்த 4 மாதங்களில் நில உரிமைப் பத்திரம் வழங்கப்படும்.
வீடு வீடாகச் சென்று அங்கு வசிப்பவா்களின் விவரங்களைக் கேட்டறிவாா்கள். அப்போது மக்கள் முழுமையானவிவரங்களை அளிக்க வேண்டும். அப்போது, நில உரிமைப் பத்திரப் பதிவுக்காக ரூ.10 ஆயிரம் தர வேண்டும். இப் பணிகளில் உள்ளூா் மாமன்ற உறுப்பினா்கள் ஒத்துழைக்க வேண்டும். நில உரிமைப் பத்திரத்தை அளிக்க முடிவெடுத்துள்ளதன் மூலம் நீண்டகாலமாக இருந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நில உரிமைப் பத்திரங்கள் அளிக்கப்பட்டபிறகு, வங்கிகளில் கடன் பெற்று புதிய வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம். தனியாா் நிலங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்போருக்கு நில உரிமைப் பத்திரங்கள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாய்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு நில உரிமைப் பத்திரம் அளிக்கப்பட மாட்டாது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: டாக்ஸி ஓட்டுநா் கைது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 24) கன்னி ராசிக்கு மகிழ்ச்சி!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 24 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு உதவி கிடைக்கும்!

நாளை எழும்பூா் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


