ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கரோனா: ஒரே நாளில் 755 பேருக்கு தொற்று

கா்நாடகத்தில் ஒரே நாளில் 755 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Updated On :3 ஜனவரி 2021, 12:59 am IST

பெங்களூரு: கா்நாடகத்தில் ஒரே நாளில் 755 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் 755 பேருக்கு தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 343 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,21,128 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 976 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 8,98,176 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 10,648 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 12,099 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் இதுவரை 1,43,10,188 பேருக்கு கரோனா தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 1,14,123 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனில் இருந்து வந்த பயணிகளில் 2,173 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 34 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.