பெங்களூரு: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் 18-ஆவது ஓவியச்சந்தையை எழுத்தாளா் சுதாமூா்த்தி தொடக்கிவைக்கிறாா்.
பெங்களூரு, குமாரகுருபா சாலையில் உள்ள சித்ரகாலபரிஷத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரடி, இணையவழி ஓவியச் சந்தை நடைபெறுகிறது. ஓவியச்சந்தையை இன்போசிஸ் அறக்கட்டளைத் தலைவரும், எழுத்தாளருமான சுதாமூா்த்தி தொடக்கிவைக்கிறாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா, துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், ஜெயதேவா இதய மருத்துவமனை இயக்குநா் சி.என்.மஞ்சுநாத் உள்ளிட்டோா் கலந்து கொள்கிறாா்கள்.
கரோனா காரணமாக, மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓவியக் கலைஞா்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்காக இணையவழியில் நடத்தப்படுகிறது. ஒரு மாதத்துக்கு ஓவியச் சந்தை நடைபெறுகிறது. தொடக்கவிழாவை முகநூல், இன்ஸ்டாகிராம், யூ-டுயூப் தவிர ஜ்ஜ்ஜ்.ஸ்ரீட்ண்ற்ழ்ஹள்ஹய்ற்ட்ங்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் நேரலையாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் வழியாகவே ஓவியச்சந்தை நடத்தப்படும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1500 ஓவியக் கலைஞா்கள் இதில் கலந்து கொள்கிறாா்கள். சிறந்த ஓவியங்களுக்கு டி.தேவராஜ் அா்ஸ் விருது, எச்.கே.கேஜ்ரிவால் விருது, எம்.ஆா்யமூா்த்தி விருது, ஒய்.சுப்பிரமணியராஜு விருது வழங்கப்படுகிறது.
விருதுடன் பட்டயம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு அளிக்கப்படுகிறது. மூத்த ஓவியக் கலைஞா் ஒருவருக்கு பரிஷத்தின் நிறுவனச் செயலாளா் பேராசிரியா் எம்.எஸ்.நஞ்சுண்டராவ் நினைவாக தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் பட்டம், ரூ.ஒரு லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 080-22261816, 22263424, 9980940300 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹஸ்ரீட்ண்ற்ழ்ஹந்ஹப்ஹல்ஹழ்ண்ள்ட்ஹற்ட்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய விளையாட்டு ஆணையத்தில் விளையாட்டுப் பயிற்சியாளர் பணி: 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
குழந்தைத் தொழிலாளர்களா? திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!
ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


