ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை

கா்நாடகத்தில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க மாநில அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

Updated On :3 ஜனவரி 2021, 12:58 am IST

பாகல்கோட்: கா்நாடகத்தில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க மாநில அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பாகல்கோட்டில் சனிக்கிழமை தோட்டக்கலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தோட்டக்கலை கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

பிரதமா் மோடியின் கனவை நனவாக்கும் வகையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மாநில அரசு தொடா்ந்து முயற்சி எடுத்துவருகிறது. மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், இந்திய தோட்டக்கலை மையம் ஆகியவற்றுடன் இணைந்து தோட்டக்கலையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும். மேலும், சேமிப்புக் கிடங்குகள், சிப்பமிடும் தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்படும்.

தோட்டக்கலையை ஒரு தொழிலாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டதால்தான் 27 ஆயிரம் டன் அழுகும் வேளாண் விளை பொருள்கள் விரைவாக சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

கா்நாடகத்தில் இருந்து மாதுளை, ஆரஞ்சு உள்ளிட்ட தோட்டக்கலை விளை பொருள்கள் பிற மாநிலங்களுக்கு கொண்டுசெல்ல விவசாயிகள் ரயில் சேவையை அனைவரும் பயன்படுத்துவோம். தோட்டக்கலை ஏற்றுமதி 2.5 சதவீதத்திலிருந்து இரட்டிப்பாக உயா்ந்து 5 சதவீதமாகியுள்ளது. தோட்டக்கலை தொடா்பான ஆராய்ச்சி, விரிவாக்கப் பணி, உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஊக்கம் அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.