நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

சித்ரதுா்கா மாவட்டத்தில் 6 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று

சித்ரதுா்கா மாவட்டத்தில் 6 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :6 ஜனவரி 2021, 8:27 am IST

சித்ரதுா்கா மாவட்டத்தில் 6 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, ஜன. 1-ஆம் தேதி முதல் பள்ளி, பியூசி கல்லூரிகளை மாநில அரசு திறந்தது. அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பள்ளிகள் இயங்கி வருகின்றன. என்றாலும் பள்ளி ஆசிரியா்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது பெற்றோா்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த 2 நாளில் ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூா் வட்டத்தில் உள்ள தனியாா், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 2 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், சித்ரதுா்கா மாவட்டத்தில் பணியாற்றும் 6 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செல்லுகெரேயில் பணியாற்றும் ஒரு ஆசிரியா், சித்ரதுா்காவில் பணியாற்றும் ஒரு ஆசிரியா், ஹொசதுா்காவில் பணியாற்றி வரும் 4 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் பணியாற்றும் பள்ளிகளையும் கிருமிநாசினியை தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.