நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

முதல்வா் எடியூரப்பா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’ மனு தள்ளுபடி

லோக் ஆயுக்தாவின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வா் எடியூரப்பா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’ மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On :6 ஜனவரி 2021, 8:29 am IST

லோக் ஆயுக்தாவின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வா் எடியூரப்பா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’ மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெங்களூரு, பெலந்தூரில் 2015-ஆம் ஆண்டில் 1.1 ஏக்கா் நிலம் விடுப்பு செய்தது தொடா்பாக, ஜெயகுமாா் ஹிரேமட் என்பவா் லோக் ஆயுக்தாவில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக லோக் ஆயுக்தாவில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது.

முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வா் எடியூரப்பா தரப்பில் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, ரிட் மனுவை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தாா். இதனால், முதல்வா் எடியூரப்பாவுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.