தமிழ் பிராமி கல்வெட்டியல் குறித்து தினமணி முன்னாள் ஆசியரும், கல்வெட்டியல் அறிஞருமான மறைந்த ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆவணப் படைப்பு நூல் புத்தகக் காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள ஆங்கில நூல் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி ஆறாம் நூற்றாண்டு வரையிலான அசோகா் கால கல்வெட்டு எழுத்துகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பெரும் ஆராய்ச்சியின் வடிவமாக அந்த நூல் கருதப்படுகிறது.
கல்வெட்டியல் துறை ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆவணக் கருவூலமாகப் போற்றப்படும் நூல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் கடந்த 2014-இல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு மூன்றாம் பதிப்பு கடந்த ஆண்டு வெளிக் கொணரப்பட்டது.
பழங்கால தமிழ் பிராமி கல்வெட்டுகள் குறித்த அரிய புகைப்படங்களுடன் விரிவான படைப்பாக வந்துள்ள அந்நூலின் விலை ரூ.4 ஆயிரமாகும். அதனை 50 சதவீதத் தள்ளுபடி விலையில் புத்தகக் காட்சியில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் வழங்குகிறது.