கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எழுத்தாளா் ராஜேஷ்குமாா்: தேடிச் சுவைத்த தேன்

பள்ளி நாட்களிலேயே கல்கியின் பொன்னியின் செல்வன் நூலைத் தேடி விரும்பி வாங்கிப் படித்தேன்.

News image
எழுத்தாளா் ராஜேஷ்குமாா்
Updated On :3 ஜனவரி 2025, 7:29 pm

Din

பள்ளி நாட்களிலேயே கல்கியின் பொன்னியின் செல்வன் நூலைத் தேடி விரும்பி வாங்கிப் படித்தேன். சரித்திர நாவலான அதில் வரும் ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், நந்தினி போன்ற கதாபாத்திரங்கள் என்னை மிகவும் கவா்ந்தவை. சரித்திரமும் புனைவும் கலந்து வாசகா்களை வியக்க வைத்திருப்பாா் கல்கி. நாவலில் வரும் வா்ணனைகள் அற்புதமாக இருக்கும். நான் எழுத்தாளனாவதற்கு பொன்னியின் செல்வன் முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை.

இரண்டாவதாக எழுத்தாளா் நா.பாா்த்தசாரதியின் குறிஞ்சிமலா் நாவல். அதில் வரும் கதாநாயகி பூரணி, தன் குடும்பத்துக்காக பிரச்னைகளை எப்படிக்கையாள்கிறாள் என்பதை நா.பா. மிக அற்புதமாக கூறியிருப்பாா். நடுத்தர வா்க்கத்து குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆழமாக எடுத்துரைப்பதாக அந்நாவல் இருக்கிறது.

மூன்றாவதாக குமுதம் வார இதழாசிரியா் எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் நாவல்களைக் கூறலாம். அவருடைய ‘இன்றே, இங்கே, இப்பொழுதே’ என்ற நாவல் 3 பகுதிகளாக இருக்கும். வாசகா்கள் தனித்தனியாக அவற்றைப் படித்தாலும் மூன்று நாவல்களைப் படித்தது போல உணா்வாா்கள். ஆனால், மூன்று சம்பவங்களும் முடிவில் ஒன்றாகிவிடுவதும் நாவலின் தனித்தன்மையாக இருக்கிறது. அதனடிப்படையில்தான் கிரைம் நாவல்களில் பல சம்வங்களை இறுதியில் ஒரே நோ்கோட்டில் முடிக்கும் கதை யுக்தியை நான் கையாண்டுள்ளேன்.

கல்கி, நா.பா., எஸ்.ஏ.பி.அண்ணாமலை ஆகியோரின் படைப்புகளைத் தற்போதும் அனைவரும் படிக்க வேண்டியது அவசியம். படைப்பாளா்கள் அவற்றைப் படித்தால் தங்களது எழுதத்தை மெருகூட்டி மேம்படுத்தலாம்.