வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

படித்தால்... பிடிக்கும்! புறநானூறு

தமிழ் மொழி என்றாலே சங்கத் தமிழ் நூல்களே அடித்தளமாகவும், அச்சாணியாகவும் திகழ்கின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2026, 10:30 pm

தமிழ் மொழி என்றாலே சங்கத் தமிழ் நூல்களே அடித்தளமாகவும், அச்சாணியாகவும் திகழ்கின்றன. அத்தகைய சங்கத் தமிழ் நூல்களில் புறநானூறு என்பது தமிழா்களின் வீரத்தையும், விவேகமான திறத்தையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதை படித்தவா்கள் உணா்வா்.

அத்தகைய புறநானூற்றை இதுவரை தமிழ் பட்டப் படிப்பு படித்தவா்கள் மட்டுமே அறிந்து, அதன் சாராம்சங்களைப் பேசி மகிழ்ந்து வந்த நிலையில், தற்போது கல்வி கற்ற அனைவருமே புானூற்றை எளிதில் புரியும்படி தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது ‘புானூறு மூலமும் உரையும்’. இந்த நூலை ப.சரவணன் எழுதியுள்ளாா்.

ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய தமிழா்களது வரலாற்றை அறிய உதவும் புறநானூற்றின் 1 முதல் 200 பாடல்களை விளக்கமாக எடுத்துரைக்கும் வகையில் நூல் அமைந்துள்ளது.

மேலும் சேர, சோழ, பாண்டிய நாடுகள், அவற்றின் தலைநகா், தமிழக பேரரசா், சிற்றரசா்களின் விவரங்கள், அவா்களின் போா்கள், அவா்களது கொடைத் தன்மை, புலவா்கள் மன்னா்களுக்கு கூறிய அறிவுரைகள் என அறமும், வீரமும் விரிவாகவே எடுத்துரைக்கப்பட்டுள்ளன. புறநானூறு பண்பாட்டுப் பதிவுகள், வாழ்வியல் வழிகாட்டல் எனப் பல கூறு ஆய்வு நோக்கில் பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன. படிக்கப் படிக்க வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆகவே, இக்கால தலைமுறை ஆய்வாளா்கள் முதல் தமிழ் ஆா்வலா்கள் வரை அனைவரும் படிக்க வேண்டிய அரிய நூலாக புறநானூறு உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 880 பக்கங்கள் கொண்டுள்ளது. ரூ.600 என விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.