புத்தகம்: விலங்குப் பண்ணை
ஜார்ஜ் ஆர்வெல் எழுதி பி. வி. ராமஸ்வாமியால் மிகவும் நேர்த்தியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது விலங்குப் பண்ணை என்கிற புனைகதை.
இரண்டாம் உலகப் போருக்கு பின்பு கம்யூனிச ரஷ்யாவில் சாதாரண உழைக்கும் மக்கள் நிச்சயம் முன்னேறுவார்கள் என்ற கருத்தை பெரும்பான்மையான மக்கள் நம்பினர். ஆனால் கம்யூனிசம் என்ற பெயரில், அந்த தத்துவத்தின் அனைத்து சாராம்சங்களையும் உதறிவிட்டு ஸ்டாலின் மக்களுக்கு செய்ததாகக் கூறப்படும் கொடுமைகளை அல்லது சர்வாதிகாரத்தன்மையை மிகத் தெளிவாக காட்டுகிறது இந்தப் புத்தகம்.
எது நமக்கு தேவை என்பது எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது எது நமக்கு தேவை இல்லை என்பது இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது உணர்வீர்கள் எந்த மாதிரியான அரசியல் அமைப்பு முறை மற்றும் ஆட்சியாளர்கள் நமக்கு தேவை இல்லை என்பதனை. மிகவும் அருமையான புத்தகம், உங்கள் சிந்தனையை மிகவும் கூர்மையாக்கும்.
- கார்த்திக்