இலக்கற்ற பயணி
இலக்கற்ற பயணியின் ஆசிரியர் இராமகிருஷணன் ஆவர். இதன் முதல் பகுதி சாலை கற்றுத் தருகிறது என்ற தலைப்பில் பயணி சுற்றுலா செல்வோரிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றான், பயணியின் மனநிலை, பயணம் செய்யும்போது எப்படி இருக்க வேண்டும், கடைப்பிடிக்க வேண்டிய சுயக்கட்டுப்பாடுகள், தேடல்கள் எவை, இயற்கை ரசிக்க ரசனை வளர்த்துக் கொள்ளுதல், சுவரசியமான நினைவுகள், அனுபவங்களை எவ்வாறு கடந்த வேண்டுமென்றக் குறிப்புகள் என ஆசிரியர் தன் அனுபவங்களை பகிருகின்றார்.
பிற்பகுதிகளில் மேலும் உலக நாடுகளின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்வியல் பறைச்சற்றும் விதமாக நீள்கின்றன. 21 ஊரடங்கின்போது இந்த நூலை வாசிப்பவர்களுக்கு பொது அறிவு, நாம் பார்க்க வேண்டிய சிறப்புமிக்க நகரங்கள் யாவும் நம் கண்முன்னே கற்பனையாக விரியும்.
- கோ. தினேஷ்நாத்