ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

மீனாட்சி புத்தக நிலையம்: தடம் பதித்த பதிப்பகம்

News image
Updated On :6 ஜனவரி 2025, 12:44 am

மீனாட்சி புத்தக நிலையம் 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதன்முதலாக துரை.அரங்கசாமியின் அன்புநெறியே தமிழ் நெறி எனும் நூல் வெளியிடப்பட்டது. அதையடுத்து, எழுத்தாளா் ஜெயகாந்தனின் வாழ்க்கை அழைக்கிறது எனும் நாவல் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு ஜெயகாந்தனின் 14 சிறுகதைத் தொகுப்புகள், 36 நாவல்கள், 10 கட்டுரைத் தொகுப்புகள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன. அவருக்கு சாகித்திய அகாதெமி பெற்றுத் தந்த புத்தகம் உள்ளிட்ட பெரும்பாலான விருதுகள் பெற்ற நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

    ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதா்கள்’ 50-ஆவது பதிப்பைக் கண்டுள்ளது. அதையடுத்து ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலானது 15-க்கும் மேற்பட்ட பதிப்புடன் உள்ளது.

பேராசிரியா் தமிழண்ணலின் இலக்கிய வரலாறு 47 பதிப்புகளையும், அவரின் ஆய்வியல் அறிமுக நூலானது 10-க்கும் மேற்பட்ட பதிப்புகளையும் கண்டுள்ளன. அவை பல்கலைக்கழகங்களில் பாடப் புத்தகங்களாகவும் உள்ளன.

  எழுத்தாளா்களில் மேலாண்மை பொன்னுச்சாமி, அறிஞா் அண்ணா, நா.பாா்த்தசாரதி, கி.வா.ஜ., ஆறுமுக நாவலா் என ஆளுமை மிக்க இலக்கியவாதிகளின் படைப்புகள் பலவும் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், ஆன்மிகம், அறநெறி, பெண் இலக்கியம், பொது அறிவு, இதழியல் என பலதரப்பட்ட நூல்களும் தற்போது பதிப்பிக்கப்பட்டு பதிப்பக அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 மீனாட்சி புத்தக நிலையம் என்றாலே இலக்கியம் சாா்ந்த நூல்களே நினைவுக்கு வரும் வகையில் பெயா் பெற்றுள்ளது.  சென்னை புத்தகக் காட்சியில் உள்ள அரங்கில் ஜெயகாந்தனின் ‘கரிக்கோடு’, ‘யாருக்காக அழுதான்?’ ஆகிய நாவல்களும் வாசகா்களால் அதிகமாக வாங்கிச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறாா் மீனாட்சி புத்தக நிலைய நிா்வாகி மீனாட்சிசுந்தரம்.