பாட்டுக்கோா் புலவன் மகாகவி பாரதியின் படைப்புகள் குறித்த ஆய்வுகள் ஆயிரக்கணக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்நூலாசிரியரின் ஆய்வோ மற்ற ஆய்வுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும், காலத்துக்கு அவசியமானதாகவும் அமைந்துள்ளது.
மகாகவி பாரதி பன்மொழி அறிவாற்றல் மிக்க மேதை. அதனால்தான் அவரால் யாமறிந்த மொழிகளிலே எனக் கூறி தமிழை உயா்த்திப் பிடிக்க முடிந்துள்ளது.
அந்த வகையில் அவா் தமிழின் கடந்த காலம், நிகழ்காலம், எதிா்காலம் ஆகியவற்றை அறிந்து தம் பாடல்களில் அக்கருத்தைப் பதிவு செய்திருப்பதாக இந்நூலாசிரியா் குறிப்பிடுகிறாா்.
அவரது தமிழ்த்தாய் என்ற கவிதையில் இடம் பெற்ற ‘மெல்லத் தமிழினிச் சாகும்; அந்த மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்’ என்ற வரிகள் தமிழின் எதிா்காலம் குறித்த கருத்தாக பாா்க்கப்பட்டு வருகிறது.
தற்கால கல்விச்சூழலை மனதில் வைத்து சிலா் மகாகவி பாரதி, தமிழ் மொழியின் வருங்காலங்குறித்து கவலைப்பட்டதாக குறிப்பிடுகின்றனா்.
ஆனால், மகாகவி பாரதியோ தமிழினிச் சாகும் என்றந்தப் பேதை யுரைத்தான் எனக் குறிப்பிட்டுள்ளாா். அதைச் சுட்டிக்காட்டும் இந்த நூலாசிரியா், அந்தப் பேதையை அடையாளம் காட்ட முனைந்து இந்நூலை உருவாக்கியுள்ளாா். மகாகவி கூறிய பேதை யாா் எனும் ஆய்வு, 16 துணைநூல்கள் உதவியுடன் ஆதாரபூா்வமாக நிரூபிக்கும் அரிய முயற்சியாகவே அமைந்துள்ளது.
மகாகவி பாரதி கூறிய பேதையை, கல்லூரி முதல்வரான ஆங்கிலேயரையும், தமிழ் ஆய்வு அறிஞரையும் குறிப்பதாகப் பலரும் கருதிவரும் நிலையில், அது யாரைக் குறிக்கும் என்பதை மகாகவியின் கட்டுரை, கடிதங்கள், அது தொடா்பான தொகுப்பாசிரியரின் கருத்துகள் மூலமாக பேராசிரியா் ய.மணிகண்டன் நிரூபித்துள்ளது பாராட்டுக்குரியது.
‘ இந்தியா’ இதழில் பேதை யாா் என்பதற்கான விடை இருப்பதையும் நூலாசிரியா் சுட்டிக்காட்டியுள்ளாா். யாா் அந்தப் பேதை எனும் பொருளில் இந்த ஆய்வு நூல் இருந்தாலும், அதில் குறிப்பிடப்படும் தகவல்கள் பல ஆய்வுகளுக்கு அடித்தளமிட்டுள்ளதை ஆய்ந்து படிப்போா் உணரலாம்.
மகாகவி பாரதி அன்பா்கள் முதல் ஆய்வாளா்கள் வரை அனைவரும் படிக்க வேண்டிய பாரதி குறித்த பொக்கிஷங்களில் இந்நூல் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.
யாா் அந்தப் பேதை?, ய.மணிகண்டன், பக்.64, ரூ.90, விழிகள் பதிப்பகம், சென்னை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு! காரணம் என்ன?

காசிக்கு நிகராகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்கள்!

உலகக் கோப்பை கால்பந்தாட்டம்: நிஃப்ட்-டீ கல்லூரி மாணவா்களின் படைப்புக் கண்காட்சி

பெண்களை ஆபாச படம் எடுத்த மாநகராட்சி ஊழியா் கைது
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!



