பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருக்கும் நிலையில் பங்குச் சந்தை எழுச்சியை அடைந்துள்ளது.
இன்று 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவரும் நிலையில் பங்குச் சந்தை திடீர் எழுச்சியை அடைந்துள்ளது.
நேற்று (ஜன.31) 58,014.17 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,672.86 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் தற்போது 824 புள்ளிகள்( 11.20 மணி நிலவரம்) அதிகரித்து 58,841.17 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல், 17,339.85 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,529.45 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 231 புள்ளிகள் உயர்ந்து 17,571.45 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.