கடந்த கால செலவுகளின் தாக்கத்தை ஈடுசெய்ய 2024 ஜனவரி 1 முதல் தனது வணிக வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் இன்று தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வானது வர்த்தக வாகனங்களுக்கு பொருந்தும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாருதி சுசூகி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹோண்டா மற்றும் ஆடி ஆகியோர் பயணிகள் வாகனங்களின் விலையை ஜனவரியில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.