அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்திருக்கும் கருத்துகள்...

News image
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா- ANI
Updated On :25 ஆகஸ்ட் 2025, 1:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசியிருக்கிறார்.

கரோனாவுக்குப் பிந்தைய இந்தியாவின் பொருளாதார மீள்ச்சி குறித்தும் இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டிருப்பது குறித்தும் போதுமான அளவுக்கு அந்நியச் செலாவணி இருப்பதையும் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார்.

“கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரத்தின் சாதனைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பிக்கைக்கு பாத்திரமானதாகவும் பரந்தளவில் அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது. இன்று இந்திய பொருளாதாரம் பெரும்பொருளாதாரத்தின்(மேக்ரோ எகனாமிக்) அடிப்படைகளால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறவிருக்கிறோம்.

கடந்த நான்காண்டுகளில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் இந்திய பொருளாதாரம் சுமார் 8 சதவீதத்தை எட்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக சராசரி பணவீக்கம் 4.9 சதவீத அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

2024-ஆம் நிதியாண்டில் நடப்புகணக்கு பற்றாக்குறையானது ஜிடிபியின் 0.6 சதவீதம் என்ற அளவில் நிலைபெற்றிருக்கிறது.

நாங்கள் நிதி நிலைத்தன்மையை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடருவோம். இதுவே எங்களது முதன்மை குறிக்கோள்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி 695 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் நிலைபெற்றிருக்கிறது. இது, 11 மாத காலத்துக்கு இறக்குமதியைக் கையாள தேவையான அளவுக்கான தொகையாகும்.

இவையனைத்திற்கும் முக்கிய காரணமாக நிதி கொள்கைகள், அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், பரந்தளவிலான உள்கட்டமைப்பு வளர்ச்சி, மேம்பட்ட நிர்வாகம், அதிக உற்பத்தி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும், விலையில் நிலைத்தன்மையை உறுதிபட வைத்திருக்கச் செய்தல் மூலம் இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது” என்றார்.

summary

‘Third largest economy in coming years’: RBI Governor Sanjay Malhotra

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.