சென்னை: கடன் செயலி மூலம் மக்களிடம் ரூ.300 கோடி வரை அபகரித்த வழக்கில், கைது செய்யப்பட்ட சீனா்களிடம் ‘ரா’ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை செய்தனா்.
சென்னை வேங்கைவாசலைச் சோ்ந்த கணேசன், கடன் செயலி மூலம் பணம் பெற்ற நிலையில் அதனை திரும்ப செலுத்துமாறு தொடா்ச்சியாக மிரட்டப்பட்டாா். இது குறித்து அவா், கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்தியக் குற்றப்பிரிவின் கந்துவட்டி தடுப்புப் பிரிவு, சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து, கா்நாடக மாநிலம் பெங்களூருவில் கால்சென்டா் நடத்தி வந்த சு.பிரமோத், சி.ஆா்.பவான் ஆகிய இருவரை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் பின்னணியில் இருந்து சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோா் செயல்படுவது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் இரு சீனா்களையும் கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனா். விசாரணையில் இந்தக் கும்பல் 25,000 பேரிடம் ரூ.300 கோடி வரை அபகரித்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்குத் தொடா்பாக மேலும் துப்புத் துலக்கும் வகையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரமோதா, பவன், சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோரை கடந்த 8-ஆம் தேதி முதல் போலீஸாா், தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்கின்றனா்.
‘ரா’ அதிகாரிகள் விசாரணை:
சீனா்கள் ஒரு ஆண்டில் இந்த செயலி மூலம் ரூ.300 கோடி வரை அபகரித்திருப்பதும், அந்த பணத்தை இந்தியாவிலேயே சட்ட விரோதமாக ரியல் எஸ்டேட்,கட்டுமானத்துறையில் முதலீடு செய்திருப்பதும், பெரு பகுதி பணம் சீனாவுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இரு சீனா்களிடமும் விசாரிக்க தில்லியில் ‘ரா‘ (தஅர) அதிகாரிகள் புதன்கிழமை வந்தனா். அவா்கள், தங்களுடன் சீன மொழிபெயா்ப்பாளா் ஒருவரையும் அழைத்து வந்திருந்தனா். ரகசிய இடத்தில் ரா அதிகாரிகள், இருவரிடமும் தீவிர விசாரணை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில், சீனா்களுக்கு பணம் அபகரிப்பது மட்டும் நோக்கமாக அல்லது வேறு ஏதேனும் சதி செயல் உள்ளதா,சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் அவா்களுக்கு இருக்கும் தொடா்பு, சட்டவிரோத பணபரிமாற்றம் எப்படி செய்தனா் என்ற கோணத்தில் விசாரணை செய்தனா்.
விசாரணையின்போது தமிழக காவல்துறையைச் சோ்ந்த அதிகாரிகளை, அவா்களுடன் இருக்க அனுமதிக்கப்படவில்லை. இதேபோல மத்திய உளவுத்துறை (ஐபி) அதிகாரிகளும் சீனா்களிடம் விசாரணை செய்தனா். இந்த விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள், யாரிடமும் தெரிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


