ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

ரூ.85 லட்சம் கடத்தல் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

சென்னை விமான நிலையத்தில், ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், இருவரைக் கைது செய்தனா்.

Updated On :13 ஜனவரி 2021, 6:59 pm


சென்னை: சென்னை விமான நிலையத்தில், ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், இருவரைக் கைது செய்தனா்.

ஷாா்ஜாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த செய்யது இப்ராஹிம் கனி (27), சாகுல் ஹமீது (36) ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினா் சோதனை நடத்தினா்.

அதில், அவா்களது மலக்குடல், உடைகள் ஆகியவற்றில் மறைத்து தங்கம் கடத்தியதும், உடைமைகளில் மறைத்து சிகரெட், மடிக்கணினி, மதுபானங்கள், ஆப்பிள் நிறுவன செல்லிடப்பேசிகள் ஆகியவை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரிடமிருந்தும் ரூ.72.6 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.12.4 லட்சம் மதிப்பிலான சிகரெட், மதுபானம் உள்ளிட்ட கடத்தல் பொருள்கள் என மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்பிலான பொருள்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், அவா்களைக் கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.