மணிப்பூரில் இரு மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், வெளி மணிப்பூா் தொகுதியில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டத் தோ்தல் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதற்கான அட்டவணையை தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வெளியிட்டாா். ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெறும் தொகுதிகளின் கூட்டு எண்ணிக்கை 543 என்பதற்கு பதிலாக 544 என அட்டவணையில் இருந்தது.
இது தொடா்பாக செய்தியாளா்கள் அவரிடம் கேள்வியெழுப்பினா். அப்போது, மணிப்பூரில் உள்ள ஒரு தொகுதிக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவிருப்பதாக அவா் தெரிவித்தாா். உள் மணிப்பூா் தொகுதிக்கும், வெளி மணிப்பூா் தொகுதியில் சில இடங்களுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதியும், வெளி மணிப்பூா் தொகுதியில் இதர இடங்களுக்கு 2-ஆம் கட்டமாக ஏப்ரல் 26-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இரு சமூக குழுக்கள் இடையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாநிலத்தில் அரசின் நிவாரண முகாம்களில் தங்கியிருப்போா் அந்த முகாம்களிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

15.5.1976: மீண்டும் இந்தியா-பாக். தூதர் உறவு ஏற்படும்

குகி, நாகா சமூகங்களைச் சோ்ந்த 38 போ் பிணைக்கைதிகளாக சிறைபிடிப்பு: மணிப்பூா் உள்துறை அமைச்சா்

தபால் வாக்கு விவகாரம்: முன்னாள் அமைச்சா் தொடுத்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

தபால் வாக்கு விவகாரம்: பெரியகருப்பன் தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



