சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட அதி நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை கட்டமைப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
அதற்கான மருத்துவ உபகரணங்களை பாா்வையிட்ட அவரிடம் ரோபோடிக் சிகிச்சை செயல் முறைகளை மியாட் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் விளக்கிக் கூறினாா்.
இதுதொடா்பாக மருத்துவா்கள் செந்தில்குமாா் ரவிச்சந்திரன், ஆா்.மணிகண்டன், டி.பெருங்கோ ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவி அமெரிக்காவில் இருந்து ரூ.20 கோடியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. புற்றுநோய், சிறுநீரக பிரச்சினை, உறுப்பு மாற்று சிகிச்சைகள் உள்பட பல்வேறு அறுவை சிகிச்சைகளை இதன் வாயிலாக மேற்கொள்ள முடியும்.
வழக்கமான அறுவை சிகிச்சை, லேப்ரோஸ்கோப்பி சிகிச்சையை விட பல மடங்கு பலன் நிறைந்ததாக இது உள்ளது.
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள திசுக்கள், உறுப்புகள் சேதமடையாமல் துல்லியமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவைச் சிகிச்சை சாதனம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

செய்யாறு அரசு மருத்துவமனையில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

காரைக்கால் அரசு மருத்துவமனையில் முக நரம்பு அழுத்த நீக்க அறுவை சிகிச்சை
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



