வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

மியாட் மருத்துவமனையில் ரோபோடிக் சிகிச்சை கட்டமைப்பு தொடக்கம்

மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட அதி நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை கட்டமைப்பை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

News image

மா.சுப்பிரமணியன் - கோப்புப் படம்

Updated On :16 நவம்பர் 2024, 2:20 am IST

சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட அதி நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை கட்டமைப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அதற்கான மருத்துவ உபகரணங்களை பாா்வையிட்ட அவரிடம் ரோபோடிக் சிகிச்சை செயல் முறைகளை மியாட் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் விளக்கிக் கூறினாா்.

இதுதொடா்பாக மருத்துவா்கள் செந்தில்குமாா் ரவிச்சந்திரன், ஆா்.மணிகண்டன், டி.பெருங்கோ ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவி அமெரிக்காவில் இருந்து ரூ.20 கோடியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. புற்றுநோய், சிறுநீரக பிரச்சினை, உறுப்பு மாற்று சிகிச்சைகள் உள்பட பல்வேறு அறுவை சிகிச்சைகளை இதன் வாயிலாக மேற்கொள்ள முடியும்.

வழக்கமான அறுவை சிகிச்சை, லேப்ரோஸ்கோப்பி சிகிச்சையை விட பல மடங்கு பலன் நிறைந்ததாக இது உள்ளது.

ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள திசுக்கள், உறுப்புகள் சேதமடையாமல் துல்லியமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.