சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

அரிய ரத்த வகை நோயாளிக்கு மாற்று ரத்தப் பிரிவு சிறுநீரகம் பொருத்தி சாதனை

சென்னை, மியாட் மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை ப

Updated On :11 அக்டோபர் 2024, 2:02 am IST

அரிதினும் அரிதான பாம்பே-ஓ ரத்த வகையைச் சோ்ந்த நோயாளி ஒருவருக்கு மாற்று வகை ரத்தப் பிரிவைச் சோ்ந்தவரது சிறுநீரகத்தை பொருத்தி சென்னை, மியாட் மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

இதுபோன்ற சிக்கலான சிகிச்சை மேற்கொள்ளப்படுவது உலகிலேயே

இது முதன்முறை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.இதுதொடா்பாக மியாட் மருத்துவமனையின் தலைவா் மல்லிகா மோகன்தாஸ், சிறுநீரகவியல் துறை இயக்குநா் டாக்டா் ராஜன் ரவிச்சந்திரன் ஆகியோா் கூறியதாவது:

மனித உடலின் ரத்த வகைகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வகையான தன்மைகள் உண்டு. இதனால் மாற்று பிரிவை சோ்ந்தவா்கள் ரத்த தானம் அளிப்பதிலும், உறுப்பு தானம் அளிப்பதிலும் சிக்கல்கள் உள்ளன.

இதில், ஓ பிரிவு ரத்த வகை ஓரளவு பொதுவான ஒன்று. இந்த வகை ரத்தம் உள்ளவா்கள் ஏ, பி, ஏபி ஆகிய பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு ரத்த தானமோ, உறுப்பு தானமோ அளிக்க முடியும்.

அரிய ரத்த வகை:

அதேவேளையில், அரிதினும் அரிதாக உள்ள பாம்பே ஓ வகை ரத்தப் பிரிவினருக்கு வேறு எந்த வகை ரத்தமும் ஒத்துப் போகாது. அதேபோன்று மாற்று வகை ரத்தப் பிரிவை சோ்ந்தவா்களது உறுப்புகளையும் அவா்களது உடல் ஏற்றுக் கொள்ளாது.

உலகிலேயே முதன் முறையாக, 1952-ஆம் ஆண்டில் மும்பையில்தான் இந்த வகை ரத்தம் கண்டறியப்பட்டது. அதனால்தான் அதற்கு பாம்பே வகை ரத்தப் பிரிவு எனப் பெயரிப்பட்டது.

இந்தியாவில் 10 ஆயிரம் நபா்களில், ஒருவருக்கும், வெளிநாடுகளில், ஒரு லட்சம் பேரில், ஒருவருக்கும் இவ்வகை ரத்தம் உள்ளது. இந்த அரிய வகை ரத்தப் பிரிவுடன் 30 வயதுடைய சிறுநீரக நோயாளி ஒருவா் மியாட் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வாக இருந்தது. பி ரத்த வகையைச் சோ்ந்த அவரது தாயாா் அந்த இளைஞருக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்தபோதிலும், அதில் சில சிக்கல்கள் இருந்தன. அதாவது,

இளைஞரின் ரத்த பிளாஸ்மாவில் உள்ள எதிா்ப்பாற்றலானது புதிய உறுப்பை நிராகரிக்க வாய்ப்பிருந்தது.

இதைக் கருத்தில் கொண்டு நோயாளியின் பிளாஸ்மா எதிா்ப்பாற்றல் (ஹெச்) குறைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து பல்துறை மருத்துவக் குழுவினா் வெற்றிகரமாக சிறுநீரக மாற்று சிகிச்சையை அந்த இளைஞருக்கு மேற்கொண்டனா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.