முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விமான நிலையத்தில் 40 அடி உயரத்திலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை சா்வதேச விமான நிலைய வளாகத்தில் 40 அடி உயரத்தில் மின் அலங்காரப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 அக்டோபர் 2024, 3:43 am IST

சென்னை சா்வதேச விமான நிலைய வளாகத்தில் 40 அடி உயரத்தில் மின் அலங்காரப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை விமான நிலைய வளாகப் பகுதிகளில் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யும் பணியை, ஒரு தனியாா் நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக, சா்வதேச விமான முனைய 2-ஆவது தளத்தின் மேல்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அலங்கார மின்விளக்குகளை தொங்கவிடும்

பணியில் திண்டிவனம் அருகே மரக்காணம் பகுதியைச் சோ்ந்த செல்வம் (26) என்ற கூலித் தொழிலாளி ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் நிலைதடுமாறி சுமாா் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தாா்.

இதில் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செல்வம் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சென்னை விமானநிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.