பாகிஸ்தானில் சிறைக் கைதிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்த இந்தியர் சரப்ஜித் சிங்கின் கதை திரைப்படமாக உள்ளது. மேரி கோம் படத்தை இயக்கிய ஓமங் குமார் இப்படத்தை இயக்குகிறார். இதில் ஐஸ்வயா ராய் நடிக்க உள்ளார்.
கடந்த 1990-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சரப்ஜித் சிங் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு சக கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
அதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஜின்னா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு அவர் மீளமுடியாத கோமா நிலையை அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்புமாறு இந்திய அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அதை பாகிஸ்தான் அரசு ஏற்கவில்லை. பிறகு அவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சரப்ஜித் சிங்கின் வாழ்க்கையைப் படமாக்க உள்ளார் ஓமங் குமார். சரப்ஜித் சிங்கின் சகோதரியின் (தல்பிர் கவுர்) கோணத்தில் கதை சொல்லப்படுகிறது. அந்த வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரை எனக்கு முன்பே தெரியும். கதை சொன்ன 15 நிமிடங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார். கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றார் இயக்குநர் ஓமங் குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் விஞ்ஞானி பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

விரதம் இருக்கும் அம்மன்

ஆயுள் பலம் அதிகரிக்க...

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


