அசாம் காவல்துறையின் வித்தியாசமான புத்தாண்டு எச்சரிக்கை
அசாம் காவல்துறையின் வித்தியாசமான புத்தாண்டு எச்சரிக்கை

அசாம் காவல்துறையின் வித்தியாசமான புத்தாண்டு எச்சரிக்கை

இந்தியா முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கரோனா தொற்றுகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால் பல முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கரோனா தொற்றுகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால் பல முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பல மாநிலங்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கும் அமலில் இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசாம் மாநில காவல்துறை புத்தாண்டிற்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து அட்டையை வெளியிட்டுள்ளனர். அதில் , நட்சத்திர ஹோட்டல் அழைப்பிதழ் பாணியில் ’இது புத்தாண்டு மாலைக்கு’ என்கிற தலைப்பில் ‘ எங்களுடைய விருந்தினராக மாறமால் இருக்க முயற்சி செய்யுங்கள்’, ’அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கும், குடித்துவிட்டு வருபவர்களுக்கும் இலவச அனுமதி’ என புத்தாண்டு இரவில் வன்முறையில் ஈடுபட்டு காவல்துறையினரிடம் சிக்கினால் என்னென்ன நடக்கும் என்கிறதை நகைச்சுவையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com