எழுத்தாளர் பூமணி காலமானார் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

லியோ நடனக் கலைஞர்கள் 1300 பேருக்கு சம்பள நிலுவை: காவல் ஆணையரிடம் புகார்!

லியோ படத்தில் பங்குபெற்ற நடனக் கலைஞர்களுக்கு முறையாக சம்பளம் தரப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

News image
Updated On :10 அக்டோபர் 2023, 6:32 pm IST

லியோ படத்தில் பங்குபெற்ற நடன கலைஞர்களுக்கு முறையாக சம்பளம் தரப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் லியோ. ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற அக்.19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடிதான்’ பாடலில் பங்கேற்ற 1300 நடனக் கலைஞர்களுக்கு முறையாகப் பேசியபடி சம்பளம் தரப்படவில்லை என காவல் ஆணையரிடம் புகாரளிக்க நடனக் கலைஞர்கள் திரளாகச் சென்றுள்ளனர்.

இந்தப் பாடலின் படப்பிடிப்பு நடந்து முடிந்து 4 மாதங்கள் ஆன பிறகும் தங்களில் பலருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை, கொடுக்கப்பட்ட சம்பளமும் முன்பு பேசியபடி தரப்படவில்லை, தயாரிப்பு தரப்பும் யூனியனும் தங்களை அலைய வைப்பதாக நடனக் கலைஞர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

மேலும், படம் வெளியாவதற்கு முன்பு தங்களுக்கு சேரவேண்டிய ஊதியத் தொகை முழுமையாகக் கிடைக்க வழி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.