சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

விடாமுயற்சி புதிய அப்டேட்!

விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் இன்று(ஆக. 16) மதியம் வெளியாக இருக்கிறது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2024, 11:15 am IST

விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட் இன்று(ஆக. 16) வெளியாக இருக்கிறது.

விடாமுயற்சி படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகர் அஜித்குமார் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஜொனாதன் மோஸ்டோ இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அதிரடி திரில்லர் திரைப்படமான 'பிரேக்டவுன்' படத்தின் தழுவலாக விடாமுயற்சி திரைப்படம் இருக்கலாம் என்ற தகவலும் முதலில் வெளியாகின. இந்தப் படத்தில் கர்ட் ரஸ்ஸல் , ஜேடி வால்ஷ், கேத்லீன் குயின்லன் ஆகியோர் நடித்திருந்தனர். 

அதேபோல, கார் சேசிங் காட்சிகள், ஒரு சாலையில் தொடர்ச்சியாக கதை நகருவது போலவும், தொடர்ந்து வெளியான நடிகர், நடிகைகளின் போஸ்டர் காட்சிகளும் கிட்டத்தட்ட பிரேக் டவுன் படத்தில் மறு உருவாக்கமாக்க இருக்கலாம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், இன்று மதியம் 1.09 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகும் என நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது, படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லருக்கான வெளியீட்டு தேதியாகக்கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.