
நடிகர் மகேஷ் பாபு இன்று(பிப். 10) தனது திருமண நாளை கொண்டாடுகிறார்.
மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர் ஆகிய இருவருக்குமிடையே கடந்த 2000-ஆம் ஆண்டு ‘வம்ஷி’ படப்பின்போது காதல் மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், தனது 20-ஆவது திருமண நாளையொட்டி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ”நீயும் நானும் 20 அழகான ஆண்டுகளாக... என்றென்றும் உன்னுடன் (என்எஸ்ஜி)நம்ரதா!” என்று தனது மனைவி மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர் தம்பத்திக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இத்தம்பதியை சமூக வலைதளங்களில் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் திருமண நாள் வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.