

நடிகர் ஆரவ் புதிய படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் பரவலாக அறியப்பட்ட நடிகர் ஆரவ், அந்தத் தொடரின் முதல் சீசனில் வெற்றியாளரானார்.
மகிழ் திருமேனியின் இயக்கத்தில் கலகத் தலைவன் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்த ஆரவ், அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்து கவனம்பெற்றார். இவர் தற்போது புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும், அங்கீகாரமும் எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு இந்த பெருமைமிகு அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் என்னை மாற்றியுள்ளது.
இப்போது இந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "AARAV STUDIOS"-ன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின் மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்து உருவானது. விஷுவல் மற்றும் கிரியேட்டில் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.
கடவுளின் அருளுடனும், திரைப்பட ரசிகர்களின் அன்புடனும் இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன் எங்களின் AARAV STUDIOS மூலம் இத்திரைப் பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.