

‘தி கேரளா ஸ்டோரி 2 - கோஸ் பியாண்ட்' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை தொடருகிறது.
தி கேரளா ஸ்டோரி 2 - கோஸ் பியாண்ட் திரைப்படம் வெள்ளிக்கிழமை(பிப். 27) திரையரங்கங்களில் வெளியாகத் தயாராக இருந்த நிலையில், அப்படம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் படத்தை வெளியிட தடை கோரப்பட்டது. அப்படத்தை வெளியிட தடை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு விசாரணை தனி நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, அப்படத்தை வெளியிட 15 நாள்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு வியாழக்கிழமை(பிப். 26) நடைபெற்ற நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.