சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் அகிரா என்கிற ஹிந்திப் படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், அடுத்ததாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடனான தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ள படத்தை இயக்கி வருகிறார். இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். மகேஷ் பாபு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா இடம்பெறுகிறார். இசை - ஹாரிஸ் ஜெயராஜ்.
கடந்த மாதம் ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதன் அடுத்தக்கட்டமாக சென்னையில் இருபது நாள்கள் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக சென்னையில் இருபது நாள்கள் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் மகேஷ் பாபு.
இதுபற்றி தயாரிப்பாளர் மது கூறும்போது: படத்தின் முக்கிய காட்சிகளை சென்னையில் படமாக்கியுள்ளோம். சென்னையில், தமிழ் ரசிகர்களிடையே மகேஷ் பாபு ஏற்படுத்தியிருக்கும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் கண்டு நான் வியந்துபோனேன். இந்தப் படம், வர்த்தக ரீதியாக சாதனை படைக்கும் என்றார்.