ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, திரைத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஃபெப்ஸி இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அடையாள வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனால், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தொடர்பான எந்தப் பணிகளும் வியாழக்கிழமை நடைபெறாது என ஃபெப்ஸி தெரிவித்துள்ளது.
மேலும், தென்னிந்திய நடிகர் சங்கம் வெள்ளிக்கிழமை (ஜன.20) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளது.