கொரியப் படமான ஓட் டூ மை ஃபாதர், ஹிந்தியில் பாரத் என ரீமேக் ஆகவுள்ளது.
சல்மான் கான், தபு போன்றோர் நடிக்கும் இப்படத்தை அலி அப்பாஸ் ஸஃபர் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் கதாநாயகியாக முதலில் தேர்வானவர் பிரியங்கா சோப்ரா. ஆனால், திடீரென அவர் இப்படத்திலிருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கத்ரினா கயிஃப் நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கடைசி நிமிடத்தில் தேர்வானதால், இப்படத்தை நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கத்ரினா கூறியதாவது:
அப்படியல்ல. நான் அப்படிப் பார்க்கவேயில்லை. இயக்குநர் அலி அப்பாஸ் என்னுடைய நண்பர். இதற்கு முன்பு, நாங்கள் இணைந்து பணியாற்றிய இரு படங்களும் வெற்றிகரமானவை.
கதை எனக்குப் பிடித்ததாலேயே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அருமையான திரைக்கதை. மேலும் என் கதாபாத்திரமும் அருமையாக அமைந்துள்ளது. எனவே இந்தப் படத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.