பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

சாகித்ய அகாதெமி விருது பெறவுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு

சாகித்ய அகாதெமி விருது பெறவுள்ள எஸ். ராமகிருஷ்ணனை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டியுள்ளார் ரஜினி..

News image
Updated On :11 டிசம்பர் 2018, 5:20 am

எழில்

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல், 2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதில் தலா ரூ.1 லட்சம் சன்மானம், தாமிரப் பட்டயம், பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். 

இந்நிலையில் சாகித்ய அகாதெமி விருது பெறவுள்ள எஸ். ராமகிருஷ்ணனை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டியுள்ளார் ரஜினி. தான் எழுதிய சஞ்சாரம் நாவலை ரஜினிக்குப் பரிசாக அளித்தார் எஸ். ராமகிருஷ்ணன். 

ரஜினி நடித்த பாபா படத்துக்கு எஸ். ராமகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.