ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் வெளியான முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இத்தகவலை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழில் உருவான ஒரு படம், இந்தளவுக்கு வசூல் செய்திருப்பது இதுவே முதல்முறை. ரஜினி நடித்த படங்களிலும் அதிகமாக வசூலித்திருப்பது 2.0தான். இந்த வகையில் ரஜினி - ஷங்கர் கூட்டணி அமைந்தாலே அந்தப் படம் வசூலில் சாதனை படைக்கும் என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.