25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அனு கீர்த்தி வாஸ்!

ஒவ்வொரு ஆண்டும் பெமினா பத்திரிகை சார்பில் மிஸ் இந்தியா அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது.

Published On :7 பிப்ரவரி 2024, 3:34 pm IST

ஒவ்வொரு ஆண்டும் பெமினா பத்திரிகை சார்பில் மிஸ் இந்தியா அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டியின் இறுதிச்சுற்று மும்பையில் நேற்று (ஜூன் 19) நடைபெற்றது. மொத்தமாக 30 பெண்கள் பங்குபெற்ற இப்போட்டியில் இந்திய அழகியை நடுவர் குழு தேர்ந்தெடுத்தனர். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடுவர் குழுவில் ஒருவர்.

Story image

சென்னையைச் சேர்ந்த அனு கீர்த்தி வாஸ் (19) 2018-ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாம் இடத்தில் ஹரியானாவின் மீனா சௌத்ரி மற்றும் மூன்றாம் இடத்தில் ஆந்திராவின் ஷ்ரேயா ராவ் ஆகியோர் இடம் பிடித்தனர். அனு சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பிரெஞ்ச் படித்து வருகிறார்.

Story image

மாடலிங் துறையில் விருப்பமுள்ள அனு கீர்த்தி வாஸ் தற்போது இந்தியா அழகி பட்டத்தை வென்றதன் மூலம், 2019-ம் ஆண்டு நடைபெறும் 'மிஸ் வேர்ல்டு' போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார்.

Story image

ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தை தற்போது பெற்றுள்ள அனு கீர்த்திவாஸுக்கு சமூக வலைத்தளங்களிலும் பாராட்டும் ஆதரவும் குவிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.