ஜீ தமிழின் செம்பருத்தி தொடர் புகழ் பாரதா நாயுடு, ஆந்திர மாநிலத்தின் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர். சில படங்களில் நடித்துள்ள இவர், செம்பருத்தி தொடரில் மித்ரா என்கிற கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். இந்நிலையில் அதே தொடரில் பணியாற்றும் பரத் என்கிறவரை விரைவில் காதல் திருமணம் செய்யவுள்ளார்.
பரத் - பாரதாவின் திருமணம், திருவண்ணாமலையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 5, 6 தேதிகளில் நடைபெறவுள்ளது. திருமண வரவேற்பு சென்னையில் நடைபெறும் என தெரிவித்துள்ளார் பாரதா.