சசிகலா வாழ்க்கை வரலாறு திரைப்படம் இயக்கவுள்ளதாக ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக திகழும் ராம் கோபால் வர்மா, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைப்படங்களை இயக்குபவர்.
அவ்வகையில், சமீபத்தில் முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவ் அரசியல் வாழ்வை அடிப்படையாக வைத்து இயக்கிய லஷ்மி என்டிஆர் வெளியாகி பரபரப்புடன் கூடிய ஆதரவை பெற்று வருகிறது.
இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை அடுத்து இயக்கவுள்ளதாக ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார். இச்செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.