தான் நடிக்கும் புதிய படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பிரதான வேடத்தில் நடிக்கிறார் யோகி பாபு. ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், கதை - திரைக்கதை - வசனம் எழுதவுள்ளார் யோகி பாபு. இதன்மூலம் தன்னிடமுள்ள இதர திறமைகளையும் இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தவுள்ளார்.
இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் சமயத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.